சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



வாகனங்களுடன் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா கால கட்டத்தில் சுற்றுலா வாகன துறை முற்றிலும் முடங்கி இருக்கும் நிலையில், சாலை வரி வசூல் செய்வது மோசமான நடவடிக்கை என்று கூறி கைகளில் கோரிக்கை அட்டைகளுடன் தனி மனித இடைவெளி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதேபோல, கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்துள்ளதாக கூறிய அவர்கள், கொரோனாவால் தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அனைத்து ஒட்டுனர்களுக்கும் கொரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். 



மேலும், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் செய்து தர வேண்டும் என்று தெரிவித்த அவர்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...