கோவை: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகனங்களுடன் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா கால கட்டத்தில் சுற்றுலா வாகன துறை முற்றிலும் முடங்கி இருக்கும் நிலையில், சாலை வரி வசூல் செய்வது மோசமான நடவடிக்கை என்று கூறி கைகளில் கோரிக்கை அட்டைகளுடன் தனி மனித இடைவெளி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்துள்ளதாக கூறிய அவர்கள், கொரோனாவால் தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அனைத்து ஒட்டுனர்களுக்கும் கொரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் செய்து தர வேண்டும் என்று தெரிவித்த அவர்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர்.

வாகனங்களுடன் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா கால கட்டத்தில் சுற்றுலா வாகன துறை முற்றிலும் முடங்கி இருக்கும் நிலையில், சாலை வரி வசூல் செய்வது மோசமான நடவடிக்கை என்று கூறி கைகளில் கோரிக்கை அட்டைகளுடன் தனி மனித இடைவெளி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்துள்ளதாக கூறிய அவர்கள், கொரோனாவால் தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அனைத்து ஒட்டுனர்களுக்கும் கொரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் செய்து தர வேண்டும் என்று தெரிவித்த அவர்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர்.