சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். கசிவை சரிசெய்ய ரூ.18 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சனிக்கிழமை (ஜூலை 4) நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் இருந்து கோவை மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக 49.5 அடி வரை தண்ணீர் எடுக்கப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 13.45 அடியாக உள்ளது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரை அணையில் இருந்து சுமார் 98 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்பட்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது 60 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அணையில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக கோடைக்காலத்தில் குடிநீர் விநியோகத்தின் அளவு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது கோடைக்காலத்தில் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 35 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், அணையில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை நடத்தினார்.



இந்த கசிவை சரிசெய்ய சுமார் ரூ.18 கோடி செலவாகும் என்றும், கேரள மாநில நீர்வளத்துறை மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பணிகள் நிறைவடைந்த பிறகு சிறுவாணி அணை மேலும் பலப்படுத்தப்பட்டு, கோடைக்காலத்தில் மாநகராட்சிப் பகுதிகளுக்கு மீண்டும் 60 எம்.எல்.டி. வரை குடிநீர் வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பணிகளை உடனடியாகத் தொடங்க தேவையான மனிதவளம் மற்றும் இயந்திரங்களை தயார்நிலையில் வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 49-இல் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் சாலை பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கேரள மாநில நீர்வளத்துறை அதிகாரிகள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...