கோவை: கோவை மாவட்டம், அன்னூரில் பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு வெளியிட்டதாக இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பெரியார் மீது அவதூறாக பதிவு செய்த இந்து அமைப்பை சேர்ந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள், அன்னூர் காவல் நிலையம் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம், அன்னூரில் பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு வெளியிட்டதாக இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பெரியார் மீது அவதூறாக பதிவு செய்த இந்து அமைப்பை சேர்ந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள், அன்னூர் காவல் நிலையம் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், மூன்றாம் ஆண்டு சட்ட கல்லூரி மாணவர். சமீபத்தில், அவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் கந்த சஷ்டி கவசத்தை குறித்து அவதூராக பதிவிட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a) மற்றும் 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பெரியாரை இழிவு படுத்தி முகநூலில் பதிவிட்ட அதே பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பு நிர்வாகி, நந்தா என்பவர் மீதும் சரி சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரியார் அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் அன்னூர் காவல் நிலையம் முன் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.