பிரதமர் குறித்து அவதூராக பதிவிட்டவர் மீது வழக்கு, ஆனால், பெரியாரை அவதூறாக பேசியவர் மீது வழக்கு பதியாதது ஏன்..? அன்னூரில் மறியல்..!

கோவை: கோவை மாவட்டம், அன்னூரில் பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு வெளியிட்டதாக இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பெரியார் மீது அவதூறாக பதிவு செய்த இந்து அமைப்பை சேர்ந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள், அன்னூர் காவல் நிலையம் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னூரில் பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு வெளியிட்டதாக இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பெரியார் மீது அவதூறாக பதிவு செய்த இந்து அமைப்பை சேர்ந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள், அன்னூர் காவல் நிலையம் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், மூன்றாம் ஆண்டு சட்ட கல்லூரி மாணவர். சமீபத்தில், அவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் கந்த சஷ்டி கவசத்தை குறித்து அவதூராக பதிவிட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a) மற்றும் 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பெரியாரை இழிவு படுத்தி முகநூலில் பதிவிட்ட அதே பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பு நிர்வாகி, நந்தா என்பவர் மீதும் சரி சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரியார் அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் அன்னூர் காவல் நிலையம் முன் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...