கோவை வெள்ளியங்கிரி 7வது மலையில் இறைவன் அழைத்ததாக கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்ட இளைஞர் - உடலை மீட்க போலீசார் தீவிரம்

கோவை: கோவை ஆலாந்துறை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் இறைவன் அழைத்ததாக கடிதம் எழுதி, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை ஆலாந்துறை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் இறைவன் அழைத்ததாக கடிதம் எழுதி, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாக உள்ளது. இந்த மலைக்கு ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இறை வழிபடுகின்றனர். இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு தடையால் மலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால், இளைஞர் ஒருவர் அந்த ஏழாவது மலைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் மகாதேவன். இவர் ஆண்டு தோறும் ஆடி மாதம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று இறை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில், மகாதேவன் தனது வீட்டில் மலைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு சுமார் எட்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். வந்த அவர் மீண்டும் வீட்டாரை தொடர்பு கொள்ளவில்லை.



இந்த நிலையில், சந்தேகமடைந்த மகாதேவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது செல்போன் எண் மூலம் நடத்திய விசாரணையில் அவரது அலைவரிசை கடைசியாக இருட்டு பள்ளத்தில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆலந்துறை போலீசார் வனத்துறை உதவியுடன் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மகாதேவன் வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரது அருகே இருந்த கடிதத்தில் தன்னை இறைவன் அழைத்துள்ளதாகவும், எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் மகாதேவனின் கையெழுத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் ஏழாவது மலையில் இருந்து மகாதேவனின் பிரேதத்தை கீழே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆடி காற்றாலும், பெய்து வரும் மழையாலும் அவரது பிரேதத்தை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞர் 2018ம் ஆண்டில் காவலர் தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...