கோவை: கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, மருத்துவத்துறை, மாநகராட்சி துறை, காவல்துறை என அனைத்து துறைகளும் இணைந்து தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, போலீசார் ஊரடங்கு விதி மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவையில் சில காவலர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி காவலர்கள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையங்களும் மூடப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவையில் போத்தனூர், சூலூர், துடியலூர், மதுக்கரை, உக்கடம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையங்கள் மூடப்பட்டது.
இந்த நிலையில், கோவை கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, மருத்துவத்துறை, மாநகராட்சி துறை, காவல்துறை என அனைத்து துறைகளும் இணைந்து தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, போலீசார் ஊரடங்கு விதி மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவையில் சில காவலர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி காவலர்கள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையங்களும் மூடப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவையில் போத்தனூர், சூலூர், துடியலூர், மதுக்கரை, உக்கடம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையங்கள் மூடப்பட்டது.
இந்த நிலையில், கோவை கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.