திருப்பூர்: 12ம் வகுப்பில் , திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 111 பள்ளிகள் முழு தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும், மாநில அளவில் முதலிடம் பிடிக்க உழைத்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகள் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: 12ம் வகுப்பில் , திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 111 பள்ளிகள் முழு தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும், மாநில அளவில் முதலிடம் பிடிக்க உழைத்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகள் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. தேர்ச்சி முடிவுகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாவட்டம் முழுவதும் 23398 பேர் தேர்வு எழுதினர். அதில் 10418 ஆண்கள் , 12980 பெண்கள் ஆவர். திருப்பூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.12% ஆக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடிக்க மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் கூறிய மாவட்ட ஆட்சியர், மாவட்டம் முழுவதும் 111 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள நிலையில், வரும் காலங்களிலும் மேலும் உழைக்க அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. தேர்ச்சி முடிவுகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாவட்டம் முழுவதும் 23398 பேர் தேர்வு எழுதினர். அதில் 10418 ஆண்கள் , 12980 பெண்கள் ஆவர். திருப்பூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.12% ஆக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடிக்க மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் கூறிய மாவட்ட ஆட்சியர், மாவட்டம் முழுவதும் 111 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள நிலையில், வரும் காலங்களிலும் மேலும் உழைக்க அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.