திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 111 பள்ளிகள் முழு தேர்ச்சி..! மாநில அளவில் முதலிடம் பிடிக்க உழைத்த அனைவருக்கும் ஆட்சியர் வாழ்த்து!

திருப்பூர்: 12ம் வகுப்பில் , திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 111 பள்ளிகள் முழு தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும், மாநில அளவில் முதலிடம் பிடிக்க உழைத்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகள் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: 12ம் வகுப்பில் , திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 111 பள்ளிகள் முழு தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும், மாநில அளவில் முதலிடம் பிடிக்க உழைத்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகள் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. தேர்ச்சி முடிவுகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மாவட்டம் முழுவதும் 23398 பேர் தேர்வு எழுதினர். அதில் 10418 ஆண்கள் , 12980 பெண்கள் ஆவர். திருப்பூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.12% ஆக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடிக்க மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் கூறிய மாவட்ட ஆட்சியர், மாவட்டம் முழுவதும் 111 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள நிலையில், வரும் காலங்களிலும் மேலும் உழைக்க அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...