திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவின் பாதிப்பின் எண்ணிக்கை குறைய தொடங்கிய நிலையில், இன்று மீண்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவின் பாதிப்பின் எண்ணிக்கை குறைய தொடங்கிய நிலையில், இன்று மீண்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக உடுமலைப்பேட்டை, திருப்பூரில் உள்ள திருமூர்த்தி நகர், கொங்கு நகர், தென்னம் பாளையம், காங்கேயம், உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இன்று திருப்பூரில் புதிதாக 327 பேர் என மொத்தம் 2865 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 157 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதோடு, இன்று 732 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 152 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஒருவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக உடுமலைப்பேட்டை, திருப்பூரில் உள்ள திருமூர்த்தி நகர், கொங்கு நகர், தென்னம் பாளையம், காங்கேயம், உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இன்று திருப்பூரில் புதிதாக 327 பேர் என மொத்தம் 2865 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 157 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதோடு, இன்று 732 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 152 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஒருவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.