கோவை மாநகராட்சியில் 33 பகுதிகளில் 854 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கோவை: கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1300க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கோவை மாவட்டத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திற்குள் புதிதாக வரும் நபர்கள், கொரோனா வைரஸ் உறுதியானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப் பட்டவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ கால் பேசி அவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா? என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...