கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு பேருக்கு கொரொனா தொற்று உறுதி; காவல் நிலையம் மூடல்

கோவை: கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு காவளர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோவை: கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு காவளர்களுக்கு கொரொனா  தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து 7 காவலர்களும்  இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது  

அவர் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு காவலர்களுக்கு  கொரொனா  தொற்று இன்று உறுதி செய்யப்பட்தன் காரணமாக, மதுக்கரை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, காவல் நிலையம் அருகில் இருக்கக்கூடிய திருமண மண்டபத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே சூலூர், துடியலூர், போத்தனூர் ஆகிய காவல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், நான்காவது காவல் நிலையமாக மதுக்கரை  காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

காவல் துறையினர் மத்தியில் வேகமாக அடுத்தடுத்து தொற்று பரவி வருவதன் காரணமாக காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...