திருப்பூரில் இன்று புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், ஒருவர் இறப்பு..!

திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

"மேலும், திருப்பூர் மாவட்டம், தளி பஞ்சாயத்தை சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர், ஏற்கனவே கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபரிடம் தொடர்பில் இருந்துள்ளார் எனவும், ஜூலை 13 ஆம் தேதி அதிக காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் அதே தினம் உயிரிழந்துள்ளார்", என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இன்று பாதிக்கப்பட்ட நபர்களில், அனுப்பர்பாளையம் ஜீவா தெரு பகுதியில் 42 வயதான பெண், 31 வயதான பெண் மற்றும் 56 வயதான பெண் உட்பட நான்கு பேருக்கும், மேலும் காங்கேயம், ராக்கிபாளையம், உடுமலை, பலங்கரை, திருப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் 8 பேருக்கும், என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால் அப்பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதோடு, இன்று திருப்பூரில் புதிதாக 201 பேர் என மொத்தம் 2965 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 274 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று 525 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் சென்றதாக 634 நபர்களிடமிருந்து ரூ 75,750 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது, என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...