கோவை மாநகராட்சி ஆணையாளர் மீது மதிமுக முன்னாள் கவுன்சிலர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் மனு

கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மீது மதிமுக முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மீது மதிமுக முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, மதிமுக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரான இவர் லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் பொறுப்பேற்றது முதல் மாநகராட்சியில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 2019 ஆம் ஆண்டில் மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட பதிவு பெற்ற ஒப்பந்தரதாரர்கள் 329 பேருக்கு உத்தரவு வழங்காமல் லஞ்சம் கேட்டு காலம் தாழ்த்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோல, அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனை, புதிதாக கட்டியுள்ள பெரிய நுழைவாயில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். 

"அங்கேயும், பெரிய தொகை கைமாறி உள்ளது", என கூறிய அவர் மாநகராட்சி ஆணையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...