கோவையில் குடும்ப தகராறில் சமாதானம் செய்ய வந்த மனைவியின் சகோதரர்களை கத்தியால் குத்திய நபர் கைது!

கோவை: கோவையில் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன், சமாதானம் செய்ய வந்த மனைவியின் சகோதரர்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன், சமாதானம் செய்ய வந்த மனைவியின் சகோதரர்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆலாந்துறை அடுத்த மூலப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஓட்டுநர் குமரேசன். இவருக்கு வடிவேலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் உள்ள குமரேசன் குடிபோதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் குமரேசனின் மனைவி சங்கீதா கடந்த 10 நாட்களுக்கு கோபமடைந்தவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த குமரேசன் வடிவேலாம் பாளையத்தில் இருக்கும் தனது மனைவியை அழைத்துவரச் சென்றுள்ளார்.

அப்போது, சங்கீதா குமரேசனுடன் செல்ல மறுக்கவே குமரேசன் தனது மனைவியை அடிக்க முயன்றார். இதனை கண்ட சங்கீதாவின் சகோதரர்களான கருப்பசாமி மற்றும் அஜித் ஆகிய இருவரும் குமரேசனை தடுத்து சமாதனம் செய்ய முயற்சி செய்துள்ளனர். குடிபோதையில் இருந்த குமரேசன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருப்பசாமி மற்றும் அஜித் ஆகிய இருவரையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த கருப்பசாமி மற்றும் அஜித் ஆகிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...