பொள்ளாச்சி ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 



பொள்ளாச்சி - வால்பாறை சாலை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதி அடர் வனப் பகுதியாகும். இங்கு சிறுத்தை, காட்டு மாடு, மான், புலி, கருஞ்சிறுத்தை என பல்வேறுபட்ட வனவிலங்குகள் மற்றும் அரியவகை பறவைகள் வசித்து வருகின்றன. 

இந்த சாலையில் ஆழியார் அணை உள்ளது. இதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை காரணமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை கூட்டம் ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. 



இதில் நான்கு யானை மற்றும் 2 குட்டியுடன் என ஆறு யானைகள் அணையை ஒட்டியுள்ள வால்பாறை சாலை நவமலை குடியிருப்புப் பகுதியில் சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகிறது.

இதனால் ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் உத்தரவு படி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் வராமல் இருக்க சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து வனசரகர் காசிலிங்கம் கூறுகையில், ஆழியார் சோதனை சாவடியில் இருந்து வால்பாறை செல்லும் பொதுமக்கள் காட்டு யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் மீறினால் கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...