பொள்ளாச்சி ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 



பொள்ளாச்சி - வால்பாறை சாலை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதி அடர் வனப் பகுதியாகும். இங்கு சிறுத்தை, காட்டு மாடு, மான், புலி, கருஞ்சிறுத்தை என பல்வேறுபட்ட வனவிலங்குகள் மற்றும் அரியவகை பறவைகள் வசித்து வருகின்றன. 

இந்த சாலையில் ஆழியார் அணை உள்ளது. இதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை காரணமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை கூட்டம் ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. 



இதில் நான்கு யானை மற்றும் 2 குட்டியுடன் என ஆறு யானைகள் அணையை ஒட்டியுள்ள வால்பாறை சாலை நவமலை குடியிருப்புப் பகுதியில் சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகிறது.

இதனால் ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் உத்தரவு படி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் வராமல் இருக்க சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து வனசரகர் காசிலிங்கம் கூறுகையில், ஆழியார் சோதனை சாவடியில் இருந்து வால்பாறை செல்லும் பொதுமக்கள் காட்டு யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் மீறினால் கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...