திருப்பூரில் இன்று 12 பேருக்கு கொரோனா பாதிப்பு; முக கவசம் அணியாத நபர்களிடம் ரூ 86,250 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், இன்று புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், இன்று புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் யூனிவர்சஸ் சாலையில் 27 வயது பெண், மாலம்பாளையத்தில் 26 வயது ஆண், வெள்ளியங்காட்டில் 41 வயதான ஆண் மற்றும் 38 வயதான பெண் உள்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூரில் புதிதாக 303 பேர் என மொத்தம் 2768 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 406 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இன்று, 613 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 128 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதோடு கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் பொது வெளியில் 681 நபர்களிடமிருந்து ரூ 86,250 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான முதியவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரழந்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...