மரணிக்கும் ஒவ்வொரு யானையின் உயிர்வலியும் நம் நெஞ்சை துளைத்து கொண்டு தான் இருக்கும் - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

கோவை: மரணிக்கும் ஒவ்வொரு யானையின் உயிர்வலியும் நமது நெஞ்சை துளைத்து கொண்டு தான் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கோவை: மரணிக்கும் ஒவ்வொரு யானையின் உயிர்வலியும் நமது நெஞ்சை துளைத்து கொண்டு தான் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் 11ம் தேதி தேன்கணிக்கட்டை பகுதியில் ஒரு ஆண் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு இரவோடு இரவாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது.

ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானையை முதுமலை மற்றும் சத்தியமங்கலம் வனசரகத்தை சார்ந்த குழுவினர் ஒரு மாதமாக கண்காணித்து வந்தனர். அவ்வப்போது மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளதையும் பார்த்திருந்தனர். 

சில நாட்களுக்கு முன்னர் தெங்குமரஹாடா வழியாக சீகூர் வனப்பகுதியில் இருப்பதையும் கண்டறிந்தனர். ஆனால் சிக்னல் மூலம் யானை இருக்கும் இடத்தை கண்டறிந்த வனப்பகுதியினர் அந்த இடத்திற்கு சென்று பார்க்கையில் யானை இறந்து இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஓடைக்கு தண்ணீர் குடிக்க சென்ற யானை அடி சறுக்கி எழ முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

பிடிபட்ட இந்த யானை சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டு முதுமலை வனப்பகுதியில் உலாவியுள்ளது. அப்படி என்றால் டெரைன் எனப்படும் இந்த பகுதியை புதிய யானைக்கு பழக்கம் இல்லாமல் இருப்பதும் உயிரிழப்புக்கு ஒரு காரணமாகவே கருதப்படுகிறது என வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூலில், நாடு விட்டு நாடு செல்லும் மனிதர்களைப் போல வாழ வழி தேடி, காடு விட்டுக் காடு சென்றும், வாழ முடியாமல் தன் வாழ்வைப் பாதியிலேயே முடித்துக்கொண்ட அதன் மரணம் இயற்கை மரணம் என்ற கணக்கில் சேர்ந்துவிடும். 

ஆனால், மரணிக்கும் ஒவ்வொரு யானையின் உயிர்வலியும் நம் நெஞ்சை எப்போதும் துளைத்துக் கொண்டுதான் இருக்கும், என்று பதிவிட்டுள்ளார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...