நீலகிரி: குன்னூர் நலிந்த குடும்பங்களுக்கு நகர காவல்துறை சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.
நீலகிரி: குன்னூர் நலிந்த குடும்பங்களுக்கு நகர காவல்துறை சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.

குன்னூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான ஓட்டுப்பட்டரை, காந்திபுரம், எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நலிந்த மக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
குன்னூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையில் காவல் துறையினர் வழங்கினர். இதில் நகர காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்
கொரோனா காலத்தில் வேலை வாய்ப்பு குறைந்து வருமானம் இல்லாத சூழலில் காவல் துறையினர் வழங்கிய இந்த நிவாரணப் பொருட்கள் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.