கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி ராஜ நாகத்தை மீட்ட வனத்துறையினர், அதனை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி ராஜ நாகத்தை மீட்ட வனத்துறையினர், அதனை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் வனப்பகுதிக்கு அருகே விவசாய நிலத்தில் ராஜ நாகம் இருப்பதாக தகவல் வனத்துறைக்கு கிடைத்துள்ளது.
அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினரும், பாம்பு மீட்பவரும் 15 அடி உள்ள ராஜ நாகத்தை மீட்டு பரிசோதனை நடத்திய பின் சிறுவாணி அடர் வனப்பகுதியில் விட்டனர்.

மேலும், வனத்துறையினர் கூறுகையில், பிடிக்கப்பட்ட பாம்பு முன்னதாகவே இருமுறை பிடிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது. ஒரு வேளை பாம்புகள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலத்திற்குள் வந்தால் வனத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாம்புகள் மூலமாக மனிதர்களுக்கும், மனிதர்கள் மூலமாக பாம்புகளுக்கு எவ்வித தீங்கு நேரிடாமல் தடுக்கலாம் என்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் வனப்பகுதிக்கு அருகே விவசாய நிலத்தில் ராஜ நாகம் இருப்பதாக தகவல் வனத்துறைக்கு கிடைத்துள்ளது.
அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினரும், பாம்பு மீட்பவரும் 15 அடி உள்ள ராஜ நாகத்தை மீட்டு பரிசோதனை நடத்திய பின் சிறுவாணி அடர் வனப்பகுதியில் விட்டனர்.

மேலும், வனத்துறையினர் கூறுகையில், பிடிக்கப்பட்ட பாம்பு முன்னதாகவே இருமுறை பிடிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது. ஒரு வேளை பாம்புகள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலத்திற்குள் வந்தால் வனத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாம்புகள் மூலமாக மனிதர்களுக்கும், மனிதர்கள் மூலமாக பாம்புகளுக்கு எவ்வித தீங்கு நேரிடாமல் தடுக்கலாம் என்றனர்.