திருப்பூர்: தமிழக முதலமைச்சர் செய்த பணிக்குதான் அவருக்கு பால் ஹாரிஸ் பெல்லோ விருது வழங்கப்படுவதாகவும் அதற்கு அவர் தகுதியானவர் என திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர்: தமிழக முதலமைச்சர் செய்த பணிக்குதான் அவருக்கு பால் ஹாரிஸ் பெல்லோ விருது வழங்கப்படுவதாகவும் அதற்கு அவர் தகுதியானவர் என திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வருக்கு அமெரிக்க ரோட்டரி பவுண்டேஷன் சார்பில் குடிநீர், சுகாதாரம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படும் பால் ஹாரிஸ் பெல்லோ என்ற விருது வழங்க தேர்வாகி உள்ளார். அவர் அதற்கு தகுதியானவர் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தற்போது இந்திய அளவில் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் பிரதமர் மோடி என்றார். அந்த அளவிற்கு ஏராளமான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை இல்லாத வகையில் மத்திய அரசு உத்தரவாதத்தைக் கொடுத்து சிறு, குறு தொழில்களுக்கு 20 சதவீத கடன் வழங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
அதேபோல விவசாயிகளின் நிலை, முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது. புதிய நம்பிக்கையை உருவாக்குபவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் எதிர் கட்சிகள் எதிரி கட்சியினராக இல்லாமல் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்பவராக விளங்க வேண்டும், அரசின் முயற்சிக்கு மாநில அரசுகள், எதிர்கட்சிகள், ஊடகங்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு வேதனை அளிக்கிறது. இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. சுகாதார அமைச்சர் முதல் கடைநிலை பணியாளர் வரை அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பலரும் மக்களுக்கு செய்த உதவிக்கு சாட்சி தான் பல அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வருக்கு அமெரிக்க ரோட்டரி பவுண்டேஷன் சார்பில் குடிநீர், சுகாதாரம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படும் பால் ஹாரிஸ் பெல்லோ என்ற விருது வழங்க தேர்வாகி உள்ளார். அவர் அதற்கு தகுதியானவர் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தற்போது இந்திய அளவில் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் பிரதமர் மோடி என்றார். அந்த அளவிற்கு ஏராளமான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை இல்லாத வகையில் மத்திய அரசு உத்தரவாதத்தைக் கொடுத்து சிறு, குறு தொழில்களுக்கு 20 சதவீத கடன் வழங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
அதேபோல விவசாயிகளின் நிலை, முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது. புதிய நம்பிக்கையை உருவாக்குபவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் எதிர் கட்சிகள் எதிரி கட்சியினராக இல்லாமல் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்பவராக விளங்க வேண்டும், அரசின் முயற்சிக்கு மாநில அரசுகள், எதிர்கட்சிகள், ஊடகங்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு வேதனை அளிக்கிறது. இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. சுகாதார அமைச்சர் முதல் கடைநிலை பணியாளர் வரை அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பலரும் மக்களுக்கு செய்த உதவிக்கு சாட்சி தான் பல அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.