திருப்பூரில் பெண்ணை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த நபர் கைது!

திருப்பூரில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்து நபரை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ ஆதாரங்களை கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் ஒரு பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி, அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்து நபரைதிருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து வீடியோ ஆதாரங்களை கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த மாது (41) கடந்த சில வருடங்களாக திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் இவர், அங்கு வேலை செய்து வரும் 24 வயது பெண் ஒருவரை காதலிப்பதாக நாடகமாடியுள்ளார். மேலும், அந்த பெண் தனியாக இருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மாது, அவரது சொந்த ஊரான சென்னிமலைக்கு குடும்பத்துடன் சென்று விட அந்த 24 வயது பெண் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

ஆனாலும், தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்து வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணிற்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

இதனையறிந்த, மாது அந்த மாப்பிள்ளைக்கு இந்த பெண்ணின் வீடியோ மற்றும் போட்டோவை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணின் போட்டோ மற்றும் வீடியோவை சமுக வலைதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.



பாதிக்கபட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், மாதுவை கைது செய்த போலீசார், போட்டோ மற்றும் வீடியோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...