கோவை: கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது. அதேசமயம் கடந்த ஒரு வாரமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது. அதேசமயம் கடந்த ஒரு வாரமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதித்த கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் உயிரிழந்தார். கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் 18 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு ஆபத்தான நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.
இதேபோல, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 85 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.
மேலும், கோவை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் கொரோனா தொற்று மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் கோவை, திருப்பூர், கரூரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா உயிரிழப்புகள் 8 ஆகவும், கோவையில் கொரோனா உயிரிழப்புகள் 10 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதித்த கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் உயிரிழந்தார். கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் 18 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு ஆபத்தான நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.
இதேபோல, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 85 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.
மேலும், கோவை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் கொரோனா தொற்று மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் கோவை, திருப்பூர், கரூரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா உயிரிழப்புகள் 8 ஆகவும், கோவையில் கொரோனா உயிரிழப்புகள் 10 ஆகவும் உயர்ந்துள்ளது.