கோவை: கோவை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் இதுவரை முககவசம் அணியாதவர்களிடம் இருந்து சுமார் 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் இதுவரை முககவசம் அணியாதவர்களிடம் இருந்து சுமார் 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியம் 228 ஊராட்சிகளில் 1,200 கிராமங்கள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு, வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதார துறையினருடன் இணைந்து உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் 52 வாரச்சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த வாரச்சந்தைகள் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை சுமார் ரூ.4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதே போல் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி கிராமம் தோறும் அறிவுறுத்தி உள்ளோம்.
இ-பாஸ் இன்றி வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.