திருப்பூரில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,300 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!

திருப்பூர்: திருப்பூரில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,300 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,300 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் திருப்பூரில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று திருப்பூர் அழைத்து வரப்பட்டு இங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 1300 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

முன்னதாக, அவர்களுக்கு உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டதோடு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...