திருப்பூர்: திருப்பூரில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,300 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,300 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் திருப்பூரில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று திருப்பூர் அழைத்து வரப்பட்டு இங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 1300 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
முன்னதாக, அவர்களுக்கு உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டதோடு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் திருப்பூரில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று திருப்பூர் அழைத்து வரப்பட்டு இங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 1300 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
முன்னதாக, அவர்களுக்கு உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டதோடு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.