கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அதில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அதில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை உட்பட திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், கொரோனா தொற்று உருவானதிலிருந்து நோயாளிகளின் வருகை எண்ணிக்கை குறைந்துள்ளது.
இருப்பினும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இங்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்படி தினமும் கோவை அரசு மருத்துவமனையில் 1500 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும், காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதித்து பரிசோதனை முடிவு வரும் வரை இன்ஃப்ளூயன்சா லைக் இல்னஸ் என்ற (ஐஎல்ஐ) வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல, மூச்சுத் திணறலுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க Severe Acute Respiratory Infection என்ற (SARI) வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் நோயாளிகள் பரிசோதனை முடிவு வரும்வரை சிகிச்சை பெறுகின்றனர். முடிவில் பாசிட்டிவ் என்று வந்தால் உடனடியாக இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐஎல்ஐ வார்டில் 8 முதல் 10 பேரும், SARI வார்டில் ஐந்து முதல் எட்டு பேரும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை உட்பட திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், கொரோனா தொற்று உருவானதிலிருந்து நோயாளிகளின் வருகை எண்ணிக்கை குறைந்துள்ளது.
இருப்பினும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இங்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்படி தினமும் கோவை அரசு மருத்துவமனையில் 1500 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும், காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதித்து பரிசோதனை முடிவு வரும் வரை இன்ஃப்ளூயன்சா லைக் இல்னஸ் என்ற (ஐஎல்ஐ) வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல, மூச்சுத் திணறலுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க Severe Acute Respiratory Infection என்ற (SARI) வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் நோயாளிகள் பரிசோதனை முடிவு வரும்வரை சிகிச்சை பெறுகின்றனர். முடிவில் பாசிட்டிவ் என்று வந்தால் உடனடியாக இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐஎல்ஐ வார்டில் 8 முதல் 10 பேரும், SARI வார்டில் ஐந்து முதல் எட்டு பேரும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.