கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பரிசோதனை முடியும் வரை சிகிச்சையளிக்க இரண்டு சிறப்பு வார்டுகள்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அதில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அதில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை உட்பட திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், கொரோனா தொற்று உருவானதிலிருந்து நோயாளிகளின் வருகை எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருப்பினும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இங்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்படி தினமும் கோவை அரசு மருத்துவமனையில் 1500 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும், காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதித்து பரிசோதனை முடிவு வரும் வரை இன்ஃப்ளூயன்சா லைக் இல்னஸ் என்ற (ஐஎல்ஐ) வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதேபோல, மூச்சுத் திணறலுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க Severe Acute Respiratory Infection என்ற (SARI) வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் நோயாளிகள் பரிசோதனை முடிவு வரும்வரை சிகிச்சை பெறுகின்றனர். முடிவில் பாசிட்டிவ் என்று வந்தால் உடனடியாக இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐஎல்ஐ வார்டில் 8 முதல் 10 பேரும், SARI வார்டில் ஐந்து முதல் எட்டு பேரும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...