Breaking: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று..! கோவை மக்கள் அதிர்ச்சி!

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவையில் நேற்றைய நிலவரப்படி 741 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இதில் கோவை செல்வபுரம் பகுதியில் தினந்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், செல்வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா  பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டது. அதில், பரிசோதிக்கப்பட்ட நபர்களில் 116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி மற்றும், நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் வீடு அப்பகுதியில் உள்ளதும், அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...