கோவை: கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் அத்தியாவசிய தூய்மைப் பொருட்களை வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் அத்தியாவசிய தூய்மைப் பொருட்களை வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் அத்தியாவசிய தூய்மைப் பொருட்களை நேற்று வழங்கப்பட்டது.
மேலும் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் (Dean) நிர்மலா, மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார், நிர்வாக அலுவலர் சவுந்தரராஜன், அலுவலக கண்காணிப்பாளர் M. ஸஹீர் ஆகியோரை சந்தித்து அங்கு நடைபெற்று வரும் சிகிச்சை குறித்து கேட்டறியப்பட்டது.
அதேபோல, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கும், மருத்துவக் குழு அதிகாரிகளுக்கும் இஸ்லாமிய புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பில் கோவை மாநகரச் செயலாளர் ஜனாப் சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம், அழைப்பியல் துறை செயலாளர் பீர் முஹம்மது மற்றும் மத்திய மண்டலச் செயலாளர் ஜனாப். C.A. அப்துல் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.