கோவை: கோவையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் தந்தை உயிரிழந்த நிலையில் காயமடைந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் தந்தை உயிரிழந்த நிலையில் காயமடைந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவையை அடுத்த அன்னூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜ்(44). இவர் தன் மகன் தரணீதரனுடன் தனது யமஹா பைக்கில் கரியாம்பாளையம் - காரமடை சாலையில் பயணித்து கொண்டு இருந்த போது ஜுப்பிட்டர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் வந்த கந்தசாமி என்பவர் அதிவேகமாக வாகனத்தை இயக்கி மோதியதால் நடராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும், அவரது மகனுக்கு இரண்டு கால்களிலும் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே நடராஜன் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, அவரது மனைவி ரேவதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அன்னூர் போக்குவரத்து காவலர்கள் விபத்து ஏற்படுத்திய கந்தசாமியை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நடராஜனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
கோவையை அடுத்த அன்னூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜ்(44). இவர் தன் மகன் தரணீதரனுடன் தனது யமஹா பைக்கில் கரியாம்பாளையம் - காரமடை சாலையில் பயணித்து கொண்டு இருந்த போது ஜுப்பிட்டர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் வந்த கந்தசாமி என்பவர் அதிவேகமாக வாகனத்தை இயக்கி மோதியதால் நடராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும், அவரது மகனுக்கு இரண்டு கால்களிலும் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே நடராஜன் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, அவரது மனைவி ரேவதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அன்னூர் போக்குவரத்து காவலர்கள் விபத்து ஏற்படுத்திய கந்தசாமியை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நடராஜனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.