வாடிக்கையாளருக்கு சேவை வழங்க ஏடிஎம்மில் வங்கி ஊழியர்கள் நியமிக்க ரிசர்வ் வங்கி யோசனை

மும்பை: ஏடிஎம் பயன்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி சர்வே எடுத்துள்ளது. இதில், ஆசியாவில் இந்தியர்கள்தான் மிக அதிக அளவில் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. மொபைல் பேங்கிங் பயன்படுத்துதிலும் இந்தியர்கள்தான் முதலிடம். சர்வே எடுத்ததில் பாதிப்பேர், வாரத்தி்ல் ஒரு முறையாவது ஏடிஎம் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இந்த பயன்பாடு 26 சதவீதமாகவும், சீனாவில் 44 சதவீதமாகவும் உள்ளது. 

இதுபோல் மொபைல் பேங்கிங் பயன்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் 11 மடங்கு உயர்ந்துள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்டில் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனை எண்ணிக்கை 63 லட்சமாக இருந்தது, கடந்த ஆகஸ்டில் சுமார் 7 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியர்கள் ஏடிஎம் மட்டுமின்றி வங்கி கிளைக்கு செல்வதிலும் அதிக அளவில் உள்ளனர். எனவே இந்தியாவில் ஏடிஎம்க்கு எப்போதுமே தேவை உள்ளது. கடந்த ஜூலையில் 75 கோடி ஏடிஎம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே மாதத்தில் 6.5 கோடி மொபைல் வங்கி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. தற்போது ஏடிஎம் இயந்திரத்துக்கு ஒரு காவலாளி மட்டும் நியமிக்கப்படுகிறார். இத்துடன் கூடுதலாக ஒரு வங்கி ஊழியர் அல்லது வங்கி சேவைக்கான ஒரு நபர் தனியாக நியமிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. இதன்மூலம், வங்கி கிளையில் பெறக்கூடிய கூடுதல் சேவைகளை ஏடிஎம் மூலாமாகவே பெறவும், வங்கி வர்த்தகத்தை விரிவு படுத்தவும் இது உதவும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...