அமெரிக்க அதிபர் தேர்தல் 2வது விவாதத்திலும் ஹிலாரிக்கு வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இரண்டாவது சுற்று விவாத நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டண் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 57 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்தவதற்காக வருகிற நவம்பர் மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் கிளின்டணின் மனைவி ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் களத்தில் உள்ளனர். அதிபர் வேட்பாளர்கள் இடையிலான நேரடி விவாதங்கள் தற்போது தொடங்கி உள்ளது. சமீபத்தில் நடந்த முதல் சுற்றில் இரு வேட்பாளர்கள் வேலைவாய்ப்பு, வரி ஏய்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக விவாதித்தனர்.இருவருக்கும் இடையே, 2வது சுற்று நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில்  டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டணும் சரமாரியாக குற்றஞ்சாட்டிக் கொண்டனர். பெண்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே அனல் பறக்கும் விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் ஆக்ரோஷத்துடன் பேசிய டிரம்ப், ‘‘இ-மெயில் அழிப்பு மோசடி தொடர்பாக, நான் ஆட்சிக்கு வந்தால், ஹிலாரியை சிறையில் அடைப்பேன்’’ என்றார்.

இந்த விவாத நிகழ்ச்சிக்கு பின்னர், அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டண் வெற்றி பெறுவார் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். 57 சதவீதம் பேர் ஹிலாரி வெற்றி பெறுவார் என்றும், 34 சதவீதம் பேர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்றும் கருத்து கூறியுள்ளனர். இரண்டாவது சுற்றிலும் ஹிலாரிக்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்து இருப்பதன் மூலம் ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.முதல் சுற்று விவாதத்திற்கு பின்னர் 62 சதவீதம் பேர் ஹிலாரிக்கும், டிரம்ப்க்கு 27 சதவீதம் பேர் மட்டும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...