நீலகிரி : குன்னூர் கோடை வெப்பம் காரணமாக தேநீர் விற்பனை குறைந்து, குளிர்பான விற்பனை அதிகரித்துள்ளது. இத்கனால், தேயிலை ஏல விற்பனையில் மந்தநிலை நிலவியதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நீலகிரி : குன்னூர் கோடை வெப்பம் காரணமாக தேநீர் விற்பனை குறைந்து, குளிர்பான விற்பனை அதிகரித்துள்ளது. இத்கனால், தேயிலை ஏல விற்பனையில் மந்தநிலை நிலவியதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். மேலும், நீலகிரி முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், தேயிலை வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். இதில், தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடந்த ஏலத்தில் மொத்தம் 12 லட்சத்து ஒரு ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில், 10 லட்சத்து 92 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ. 10 கோடியே 83 லட்சமாகும். இது 92 சதவீத விற்பனை ஆகும்.
சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ. 187 ஆகவும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.249 என விற்பனையானது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.88 முதல் ரூ. 94 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ. 112 முதல் ரூ.118 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ. 85 முதல் ரூ. 92 வரையும், உயர் வகை ரூ. 118 முதல் ரூ. 125 வரையும் இருந்தது. தற்போது சமவெளிப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிர்பான விற்பனை அதிகரித்து இருப்பதால், ஏலத்தில் உள்ளூர் வியாபாரிகளின் பங்களிப்பு குறைந்து, விற்பனையும், விலையும் சரிந்துள்ளதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு கூறியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். மேலும், நீலகிரி முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், தேயிலை வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். இதில், தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடந்த ஏலத்தில் மொத்தம் 12 லட்சத்து ஒரு ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில், 10 லட்சத்து 92 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ. 10 கோடியே 83 லட்சமாகும். இது 92 சதவீத விற்பனை ஆகும்.
சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ. 187 ஆகவும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.249 என விற்பனையானது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.88 முதல் ரூ. 94 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ. 112 முதல் ரூ.118 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ. 85 முதல் ரூ. 92 வரையும், உயர் வகை ரூ. 118 முதல் ரூ. 125 வரையும் இருந்தது. தற்போது சமவெளிப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிர்பான விற்பனை அதிகரித்து இருப்பதால், ஏலத்தில் உள்ளூர் வியாபாரிகளின் பங்களிப்பு குறைந்து, விற்பனையும், விலையும் சரிந்துள்ளதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு கூறியுள்ளது.