அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1,453 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைகண்காணிக்க, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அன்னூர் காவல் நிலைய போலீசார் கருமத்தம்பட்டி–அன்னூர் சாலை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தை தணிக்கை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தில் இருந்த, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (44), ரமேஷ்குமார் (43), மாதேஸ்வரன் (42) ஆகியோரை கைது செய்த போலீசார், 

சுமார் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களும், அந்த நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் அல்லது சட்ட ஒழுங்குக்கு எதிராக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் எச்சரித்துள்ளார்.

Newsletter

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...