அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1,453 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைகண்காணிக்க, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அன்னூர் காவல் நிலைய போலீசார் கருமத்தம்பட்டி–அன்னூர் சாலை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தை தணிக்கை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தில் இருந்த, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (44), ரமேஷ்குமார் (43), மாதேஸ்வரன் (42) ஆகியோரை கைது செய்த போலீசார், 

சுமார் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களும், அந்த நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் அல்லது சட்ட ஒழுங்குக்கு எதிராக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் எச்சரித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...