கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலத்தில் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்படுவதால் புதிய சிறுபாலம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 12க்குட்பட்ட உடையாம்பாளையம் பகுதியிலுள்ள இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் எளிதாக வடிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று (24.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மழைக்காலங்களில் ஆணைகட்டி பரப்பளவிலுள்ள மழைநீர், பன்னிமடை வாய்க்கால் வழியாக வெள்ளக்கிணறு குட்டையிலிருந்து இராஜவாய்க்கால் தரைமட்ட குழாய் பாலத்தின் வழியாக சிங்காநல்லூர் கால்வாய் வழியாக செல்கிறது. அங்கிருந்து நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. எனினும், மழைக்காலத்தில் இராஜவாய்க்கால் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால், அப்பகுதியிலுள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையில் புதிதாக சிறுபாலம் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரித்து பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார். இது மழைநீர் வடிகால் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் கோபிநாத், கணேசன், ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
மழைக்காலங்களில் ஆணைகட்டி பரப்பளவிலுள்ள மழைநீர், பன்னிமடை வாய்க்கால் வழியாக வெள்ளக்கிணறு குட்டையிலிருந்து இராஜவாய்க்கால் தரைமட்ட குழாய் பாலத்தின் வழியாக சிங்காநல்லூர் கால்வாய் வழியாக செல்கிறது. அங்கிருந்து நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. எனினும், மழைக்காலத்தில் இராஜவாய்க்கால் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால், அப்பகுதியிலுள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையில் புதிதாக சிறுபாலம் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரித்து பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார். இது மழைநீர் வடிகால் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் கோபிநாத், கணேசன், ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.