குன்னூர் டான்டீ தொழிற்சாலையில் தேயிலை தூள் உற்பத்தி நிறுத்தம் : வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

நீலகிரி : குன்னூர் டான்டீ தொழிற்சாலையில் தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் வேலையின்றி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நீலகிரி : குன்னூர் டான்டீ தொழிற்சாலையில் தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் வேலையின்றி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குன்னூர் டைகர்ஹில் பகுதியில் உள்ள டான்டீ தொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். டான்டீ நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், பசுந்தேயிலை வரத்து குறைவு என்ற காரணத்தால், குன்னூர் டைகர்ஹில் பகுதியில் உள்ள டான்டீ தொழிற்சாலையில் திடீரென உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்ததால், சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது, குன்னூர் தேயிலை தோட்ட கழகத்திற்கு உட்பட்ட இடங்களில் பறிக்கப்படும் குறைந்தளவு பசுந்தேயிலை, கோத்தகிரி குயின்சோலை டான்டீ தொழிற்சாலைக்கு கொண்டு சென்று உற்பத்தி செய்யப்படுகிறது.



இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “சமீபத்தில் டான்டீ நிறுவனத்திற்கு அரசு 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. தற்போது, உற்பத்தியும் நிறுத்தியுள்ளதால், வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பராமரிப்பு பணி முழுமையாக நடப்பதில்லை,”என்றனர்.

இது தொடர்பாக டான்டீ அதிகாரிகள் கூறுகையில், “பசுந்தேயிலை வரத்து குறைந்துள்ள நிலையில், மின் செலவு உள்ளிட்ட உற்பத்தி செலவை குறைக்கவும், குயின்சோலை தொழிற்சாலைக்கு ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், உயர்தர உற்பத்தியை மேற்கொள்ளவும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. வரும் 23ம் தேதியில் இருந்து உற்பத்தி துவங்கும்,” என்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...