குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஒருபுறம் : குடிநீர் தொட்டியில் வீணாகும் தண்ணீரை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மறுபுறம்

நீலகிரி : குன்னூரில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வரும் நிலையில், தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களாக வீணாகும் நீரை தடுக்க நகராட்சி பொறியியல் பிரிவினர் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

நீலகிரி : குன்னூரில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வரும் நிலையில், தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களாக வீணாகும் நீரை தடுக்க நகராட்சி பொறியியல் பிரிவினர் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

குன்னூர் நகராட்சிக்கு ரேலியா அணை, ஜிம்கானா, கரன்சி உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து கொண்டு வரப்படும் நீர் கிரேஸ் ஹில் நீர்தேக்க தொட்டியில் சேமித்து, 30 வார்டுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதில், ஓட்டுப்பட்டறை மோர்ஸ் கார்டன் அருகேயுள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரம்பி தண்ணீர் வீணாகி வெளியே சாலையில் ஓடியது. 



இது குறித்து பொதுமக்கள் நகராட்சி பொறியியல் பிரிவு துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், குடிநீர் வீணாகி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இதனை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...