குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஒருபுறம் : குடிநீர் தொட்டியில் வீணாகும் தண்ணீரை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மறுபுறம்

நீலகிரி : குன்னூரில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வரும் நிலையில், தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களாக வீணாகும் நீரை தடுக்க நகராட்சி பொறியியல் பிரிவினர் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

நீலகிரி : குன்னூரில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வரும் நிலையில், தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களாக வீணாகும் நீரை தடுக்க நகராட்சி பொறியியல் பிரிவினர் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

குன்னூர் நகராட்சிக்கு ரேலியா அணை, ஜிம்கானா, கரன்சி உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து கொண்டு வரப்படும் நீர் கிரேஸ் ஹில் நீர்தேக்க தொட்டியில் சேமித்து, 30 வார்டுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதில், ஓட்டுப்பட்டறை மோர்ஸ் கார்டன் அருகேயுள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரம்பி தண்ணீர் வீணாகி வெளியே சாலையில் ஓடியது. 



இது குறித்து பொதுமக்கள் நகராட்சி பொறியியல் பிரிவு துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், குடிநீர் வீணாகி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இதனை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...