இருகூர் வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்க உதவிய காவலர் : மாநகர காவல் ஆணையர் பாராட்டு

கோவை : இருகூர் காமாட்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவிய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை : இருகூர் காமாட்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவிய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்காநல்லூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட இருகூர் காமாட்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அப்போது, அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஏ. பிரேம்குமார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க உதவினார். அவரின் இந்த சேவையை பாராட்டி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...