கரூர் இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

கரூர் : அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 250 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

கரூர் : அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 250 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவிற்காக மொத்தம் (கூடுதல் கருவிகளும் சேர்த்து) 300 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,200 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 325 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் (VVPAT) பயன்படுத்தப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள 250 வாக்குச்சாவடி மையங்களும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 250 வாக்குச்சாவடி மையங்களிலும் மத்திய அரசு பணியில் உள்ள அலுவலர்கள் தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 29 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவுள்ளது. 3 கம்பெனியைச்சேர்ந்த 192 துணை ராணுவப்படையினரும், கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த 552 காவலர்கள் மற்றும் இதர மாவட்டங்களைச் சேர்ந்த 1,070 காவலர்கள் என மொத்தம் 1,622 காவலர்களும், 500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...