கரூர் : அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 250 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
கரூர் : அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 250 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவிற்காக மொத்தம் (கூடுதல் கருவிகளும் சேர்த்து) 300 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,200 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 325 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் (VVPAT) பயன்படுத்தப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள 250 வாக்குச்சாவடி மையங்களும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 250 வாக்குச்சாவடி மையங்களிலும் மத்திய அரசு பணியில் உள்ள அலுவலர்கள் தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 29 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவுள்ளது. 3 கம்பெனியைச்சேர்ந்த 192 துணை ராணுவப்படையினரும், கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த 552 காவலர்கள் மற்றும் இதர மாவட்டங்களைச் சேர்ந்த 1,070 காவலர்கள் என மொத்தம் 1,622 காவலர்களும், 500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவிற்காக மொத்தம் (கூடுதல் கருவிகளும் சேர்த்து) 300 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,200 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 325 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் (VVPAT) பயன்படுத்தப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள 250 வாக்குச்சாவடி மையங்களும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 250 வாக்குச்சாவடி மையங்களிலும் மத்திய அரசு பணியில் உள்ள அலுவலர்கள் தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 29 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவுள்ளது. 3 கம்பெனியைச்சேர்ந்த 192 துணை ராணுவப்படையினரும், கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த 552 காவலர்கள் மற்றும் இதர மாவட்டங்களைச் சேர்ந்த 1,070 காவலர்கள் என மொத்தம் 1,622 காவலர்களும், 500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.