அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடக்கும் அரசு பள்ளி தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆய்வு

கரூர் : அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு தளவாபாளையம் அரசு பள்ளியில் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்குப்பதிவை தி.மு.க. வேட்பாளர் வி .செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.


கரூர் : அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு தளவாபாளையம் அரசு பள்ளியில் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்குப்பதிவை தி.மு.க. வேட்பாளர் வி .செந்தில் பாலாஜி பார்வையிட்டார். 



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது :-திராவிட முன்னேற்றக் கழகம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். மேலும், மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். கரூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். தேர்தல் விதிப்படி வாக்காளர்களுக்கு தேர்தல் சின்னத்தை சொல்லக்கூட விடாமல், காவல் துறை கெடுபிடியாக செயல்படுவது குறித்து தலைமைக்கு தெரிவித்திக்கிறேன். தனியார் இடத்தில் நான்கு பேர் கூட்டாக நிற்கக் கூட விடாமல் காவல்துறை வழக்கு போடுவதாக மிரட்டுகிறது. இது குறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்க இருக்கிறோம், என தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...