அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அமமுக சார்பில் சுகுமார், மநீம சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் சார்பில் விஜயராகவன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல வாக்குப்பதிவு் காலை 7 மணிக்கு துவங்கியது.
சூலூர் தொகுதிக்கு உட்பட்ட வதம்பச்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில், அதிமுக வேட்பாளர் கந்தசாமி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
இதையடுத்து பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் கந்தசாமி, சூலூரில் வாக்குப்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பொதுமக்கள் தமிழக அரசிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும்,எனது வெற்றி என்பது தமிழக அரசிற்கு கிடைக்கும் வெற்றி எனவும் அவர் கூறினார்.
சூலூர் தொகுதியில் அதிகமாக உள்ள நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது எனவும், சூலூர் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன் எனவும் கூறிய அவர், எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என தெரிவித்தார்.
அமமுக ஒரு அமைப்பே அல்ல எனவும், எங்கள் பகுதியில் அந்த கட்சியே கிடையாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் காசிற்காக சிலர் அமமுக சென்றாலும், உண்மையான தொண்டர்கள் அதிமுகவிலேயே உள்ளனர் எனவும், அமமுக வெற்றியை பாதிக்காது எனவும் கந்தசாமி தெரிவித்தார்
சூலூர் தொகுதியில் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 743 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர்.15 சுயேட்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அமமுக சார்பில் சுகுமார், மநீம சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் சார்பில் விஜயராகவன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
சூலூர் தொகுதிக்கு உட்பட்ட வதம்பச்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில், அதிமுக வேட்பாளர் கந்தசாமி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
இதையடுத்து பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் கந்தசாமி, சூலூரில் வாக்குப்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பொதுமக்கள் தமிழக அரசிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும்,எனது வெற்றி என்பது தமிழக அரசிற்கு கிடைக்கும் வெற்றி எனவும் அவர் கூறினார்.
சூலூர் தொகுதியில் அதிகமாக உள்ள நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது எனவும், சூலூர் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன் எனவும் கூறிய அவர், எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என தெரிவித்தார்.
அமமுக ஒரு அமைப்பே அல்ல எனவும், எங்கள் பகுதியில் அந்த கட்சியே கிடையாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் காசிற்காக சிலர் அமமுக சென்றாலும், உண்மையான தொண்டர்கள் அதிமுகவிலேயே உள்ளனர் எனவும், அமமுக வெற்றியை பாதிக்காது எனவும் கந்தசாமி தெரிவித்தார்
சூலூர் தொகுதியில் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 743 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர்.15 சுயேட்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அமமுக சார்பில் சுகுமார், மநீம சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் சார்பில் விஜயராகவன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.