தன்னை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் எனவும் அதிமுக வேட்பாளர் கந்தசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அமமுக சார்பில் சுகுமார், மநீம சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் சார்பில் விஜயராகவன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல வாக்குப்பதிவு் காலை 7 மணிக்கு துவங்கியது.

சூலூர் தொகுதிக்கு உட்பட்ட வதம்பச்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில், அதிமுக வேட்பாளர் கந்தசாமி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

இதையடுத்து பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் கந்தசாமி, சூலூரில் வாக்குப்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பொதுமக்கள் தமிழக அரசிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும்,எனது வெற்றி என்பது தமிழக அரசிற்கு கிடைக்கும் வெற்றி எனவும் அவர் கூறினார்.

சூலூர் தொகுதியில் அதிகமாக உள்ள நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது எனவும், சூலூர் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன் எனவும் கூறிய அவர், எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என தெரிவித்தார்.

அமமுக ஒரு அமைப்பே அல்ல எனவும், எங்கள் பகுதியில் அந்த கட்சியே கிடையாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் காசிற்காக சிலர் அமமுக சென்றாலும், உண்மையான தொண்டர்கள் அதிமுகவிலேயே உள்ளனர் எனவும், அமமுக வெற்றியை பாதிக்காது எனவும் கந்தசாமி தெரிவித்தார்

சூலூர் தொகுதியில் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 743 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர்.15 சுயேட்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அமமுக சார்பில் சுகுமார், மநீம சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் சார்பில் விஜயராகவன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...