கோத்தகிரி பூங்காவில் அலைமோதிய கூட்டம் : பூத்து குலுங்கும் மலர்களைக் கண்டு உற்சாகம்

நீலகிரி : தொடர் விடுமுறையினால் கோத்தகிரி நேரு பூங்காவில் பூத்துள்ள அழகிய மலர்களை, அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி : தொடர் விடுமுறையினால் கோத்தகிரி நேரு பூங்காவில் பூத்துள்ள அழகிய மலர்களை, அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

கோத்தகிரி நேரு பூங்காவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரக மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, கோடை சீசனுக்காக பூங்கா தயார்படுத்தப்பட்டுள்ளது.



தற்போது, பூங்காவில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக, பல வண்ணங்களில் மலர்ந்துள்ள ரோஜா மற்றும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்துள்ள சூரியகாந்தி உள்ளிட்ட மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. உதகை தாவரவியல் பூங்காவில், 123-வது மலர் கண்காட்சி, துவங்கியதையடுத்து, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். உதகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், கோத்தகிரி நேரு பூங்காவில் திரண்டனர். குறிப்பாக, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சிறுவர், சிறுமியரின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் இதமான காலநிலையை அனுபவித்து பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...