கோவையில் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் : அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக 8 பேர் கைது

கோவை : கோவையில் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிகக்கையாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை : கோவையில் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிகக்கையாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.



கடந்த 14-ம் தேதி கோவை - அவிநாசி சாலையின் பரபரப்பான பகுதியில் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்த கணபதியைச் சேர்ந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகிய இரண்டு பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த 4 பேரை கைது செய்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்திற்காக பழிக்குப் பழி வாங்குவதற்கான செயல்களில் ஈடுபட இரு தரப்பினரும் திட்டமிட்டிருந்தனர். இதையறிந்த பந்தயசாலை போலீசார், இரு தரப்பினரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முடிவு செய்தனர். அதன்படி, மோர் மார்கெட் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ், கேசவன், பிரதீப், நவீன்குமார் காமராஜபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தமிழரசன், கௌதம், நந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...