நீலகிரி : உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி : உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. மாலையில் திடீரென உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது, இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ள நீர் செல்வதால் வாகன ஓட்டிகள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதன் காரணமாக, உதகையில் 123-வது மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலாப் பயணிகள், குன்னூர், கோத்தகிரி வழியாக சமவெளிப் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. மாலையில் திடீரென உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது, இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ள நீர் செல்வதால் வாகன ஓட்டிகள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதன் காரணமாக, உதகையில் 123-வது மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலாப் பயணிகள், குன்னூர், கோத்தகிரி வழியாக சமவெளிப் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது வெகுவாக பாதிக்கப்பட்டனர்.