காரமடையில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோவை : காரமடை அருகே உள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

கோவை : காரமடை அருகே உள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை திம்மண்ண கவுண்டன் புதூர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இத்திருக்கோவில் வளாகம் சேதமானதால் பழைய கோவிலை அகற்றி விட்டு, மூலவர் விநாயகருக்கு கருவறை, முன்மண்டபம் மற்றும் வசந்தமண்டபம் ஆகிய திருப்பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தன. இத்திருக்கோவிலில் தற்போது பணிகள் முடிவடைந்து கோவில் முழுவதும் கருங்கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு, இன்று குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு துவங்கி அதிகாலை வரை சிவாச்சாரியர்களை கொண்டு 108 திரவியங்கள் மற்றும் புனித நீரினை எடுத்து கொண்டு வரப்பட்டு நான்கு கால யாக வேள்விகள் நடத்தப்பட்டது. 



இதனையடுத்து, இன்று யாக வேள்வியில் வைக்கப்பட்ட புனித நீரினை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசங்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...