சித்ரா பகுதியில் புதிய காவல்நிலையம் அமைக்கக்கோரி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் கோரிக்கை

கோவை : கோவை மாவட்டம் சித்ரா பகுதியில் புதிய காவல்நிலையம் அமைக்கக்கோரி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் தமிழக தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் சித்ரா பகுதியில் புதிய காவல்நிலையம் அமைக்கக்கோரி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் தமிழக தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.

இது தொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் எழுதப்பட்ட சார்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகர காவல்நிலையத்திற்குட்பட்ட அவிநாசி சாலையில் பீளமேடு ஈ2 காவல்நிலையம் உள்ளது. இக்காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளாக உடையாம் பாளையம், சவுரிபாளையம், பீளமேடு, நவ இந்தியா, ஆவாரம்பாளையம், ஹோப்காலேஜ், விமானநிலையம், வீரியம் பாளையம், சின்னியம்பாளையம், கருப்பராயன்பாளையம் உள்ளடக்கிய மாநகரத்திலேயே அதிக பகுதிகளையும், மக்கள் தொகை மற்றும் பரப்பளவு கொண்ட காவல் நிலையாகும். ஆனால், மக்கள் தொகைக்கேற்ப காவல் நிலைய எண்ணிக்கையும், காவல் காகம் எண்ணிக்கையும் இல்லாததால் குற்ற சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பான சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக எளிதில் ஸெல்வ இயலாத சூழ்நிலை உள்ளது.

மேலும், இக்காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான அவினாசி சாலையில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் மற்றும் விமான நிலையம் தொழில்நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளதால், நாள்தோறும் அனைத்து பகுதிகளுக்கும் பீளமேடு காவல்துறையால் ரோந்து பணியினை தீவிரப்படுத்த இயலாத நிலை உள்ளது. குறிப்பாக, அவினாசி சாலையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விமான நிலையத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு ஆகியவைகளால், இதர பணிகளில் முழு கவனம் செலுத்த இயலாமலும், போதிய காவலர்கள் நியமனம் செய்யாத்தால் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

ஆகவே, அரசு மருத்துவக்கல்லூரி ஜெகநாதர் நகர் மற்றும் சித்ரா நேரு நகர், வீரியம்பாளையம், கருப்பராயன்பாளையம், கோல்டுவின்ஸ், சின்னியம்பாளையம், விமானநிலையம் ஆகிய பகுதிகளை இணைத்து போக்குவரத்து, குற்றப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டிகிறோம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...