நீலகிரி : உதகையில் நடக்கும் 123-வது மலர் கண்காட்சி விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை துவக்கி வைப்பதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி : உதகையில் நடக்கும் 123-வது மலர் கண்காட்சி விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை துவக்கி வைப்பதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உதகையில் (நாளை) 17-ம் தேதி, 123-வது மலர் கண்காட்சி துவங்குகிறது. காலை 10 மணிக்கு, துவங்கும் விழாவை, மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்து பேசுகிறார். வேளாண்மை துறை முதன்மை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி வரும் 21ம் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் பரிசுகளை வழங்குகிறார்.

இக்கண்காட்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி, கழிப்பிட வசதி, தண்ணீர் வசதியுடன் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதன்முதலாக, பூங்கா சுற்றுப்புறங்களில் 'டிரோன்' மூலம், கண்காணித்து பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
