கோவை : கோவை - பாலக்காடு சாலையில் உள்ள க.க சாவடி அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை : கோவை - பாலக்காடு சாலையில் உள்ள க.க சாவடி அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை - பாலக்காடு சாலையில் உள்ள நவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (19). இவர் க.க சாவடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து சென்று கொண்டிருந்தார். இப்படியிருக்க திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே மரக்கிளைகளும் விழுந்த வண்ணம் இருந்தது. இதில், சாவடி அருகே சூர்யா சென்று கொண்டிருந்தபோது திடீரென மரத்தின் ஒரு கிளை அவர் மீது விழுந்தது. இந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் அவரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், தலையில் பலத்த காயம் இருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மரத்தின் கிளை விழுந்து இளைஞர் பலியான சம்பவம் கோவையில் உள்ள பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - பாலக்காடு சாலையில் உள்ள நவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (19). இவர் க.க சாவடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து சென்று கொண்டிருந்தார். இப்படியிருக்க திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே மரக்கிளைகளும் விழுந்த வண்ணம் இருந்தது. இதில், சாவடி அருகே சூர்யா சென்று கொண்டிருந்தபோது திடீரென மரத்தின் ஒரு கிளை அவர் மீது விழுந்தது. இந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் அவரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், தலையில் பலத்த காயம் இருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மரத்தின் கிளை விழுந்து இளைஞர் பலியான சம்பவம் கோவையில் உள்ள பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
